/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஒருவரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
/
ஒருவரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 14, 2025 03:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : வீட்டுமனை தகராறில் ஒருவரை தாக்கிய சகோதரர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் அடுத்த நெற்குணத்தைச் சேர்ந்தவர் பழனிவேல், 42; எதிர் வீட்டைச் சேர்ந்தவர் முருகன் மகன்கள் கோகுல், ராகுல். இவர்களுக்கிடையே வீட்டுமனையில் ஒரு செண்ட் பட்டா மாறியது தொடர்பாக பிரச்னை இருந்து வருகிறது.
இது தொடர்பாக கடந்த 10ம் தேதி ஏற்பட்ட தகராறில் கோகுல், ராகுல் ஆகியோர் பழனிவேலை தாக்கி, மிரட்டல் விடுத்தனர்.
புகாரின் பேரில், கோகுல், ராகுல் மீது காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.