/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கூலி தொழிலாளியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
/
கூலி தொழிலாளியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
ADDED : ஜூன் 19, 2025 05:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : தகராறில் கூலி தொழிலாளியை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
விழுப்புரம் அடுத்த காணை குப்பத்தை சேர்ந்தவர் முருகன், 42; கூலி தொழிலாளி. இவருக்கும், இவரது மனைவி கவிதா, என்பவருக்கும் கடந்த 16ம் தேதி தகராறு ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த கவிதா உறவினர்கள் அதே பகுதியை சேர்ந்த மணி, வசந்த், சூர்யா, கஜேந்திரன் ஆகியோர் சேர்ந்து முருகனை திட்டி தாக்கி மிரட்டல் விடுத்தனர். காணை போலீசார், மணி உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.