/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தம்பதியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
/
தம்பதியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
ADDED : ஆக 04, 2025 11:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: தகராறில் தம்பதியை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் அடுத்த கோவிந்தபுரத்தைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன், 48; அதே பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 52; உறவினர்கள். இவர்களுக்குள் 50 சென்ட் பொதுவான நிலம் பாகப்பிரிவினை செய்யாமல் உள்ளது.
அந்த நிலத்தில் அரிகிருஷ்ணன் மனைவி ராதா, 39; மாடு கட்டியுள்ளார். இதனால், மணிகண்டன், அவரது மனைவி மல்லிகா, 48; மற்றும் குமார், மணிபாலன் ஆகியோர் தகராறு செய்து அரிகிருஷ்ணன், ராதாவை தாக்கினர்.புகாரின் பேரில், மல்லிகா உட்பட 4 பேர் மீது காணை போலீசார், வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்தனர்.

