/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இந்து முன்னணியினர் 40 பேர் மீது வழக்கு
/
இந்து முன்னணியினர் 40 பேர் மீது வழக்கு
ADDED : டிச 09, 2025 03:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 40 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் நகராட்சி திடலில், நேற்று முன்தினம் இந்து முன்னணி சார்பில் திருப்பரங் குன்றத்தில் நீதிமன்ற தீர்ப்பை மீறி முருக பக்தர்களை அவமதித்த தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
இது குறித்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி மாவட்ட தலைவர் சதீஷ், 37; உட்பட 40 பேர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்தனர்.

