/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இரு தரப்பு மோதல் 5 பேர் மீது வழக்கு
/
இரு தரப்பு மோதல் 5 பேர் மீது வழக்கு
ADDED : ஏப் 16, 2025 04:20 AM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே இரு தரப்பு மோதலில் 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் அடுத்த பிடாகம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் மகன் அபிராஜ், 20; இவர், நேற்று முன்தினம் அதே பகுதியில் தனது நண்பர்களோடு பாட்டு பாடி கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியே நடந்து சென்ற அப்பகுதியை சேர்ந்த கலைவாணன், 37; 'ஏன் சத்தமாக பாடுகிறாய்' என கேட்டு அபிராஜை திட்டி, தாக்கினார்.
இதையடுத்து அபிராஜ் மற்றும் அவர் நண்பர்கள் ஜெயராஜ், 23; லோகேஷ், 25; நித்திஷ்குமார், 22; ஆகியோர் கலைவாணனை தாக்கினர்.
இரு தரப்பு புகாரின் பேரில், கலைவாணன், அபிராஜ் உட்பட 5 பேர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

