ADDED : நவ 06, 2025 11:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: தாயை திட்டி தாக்கிய மகன் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் அடுத்த ராகவன்பேட்டையைச் சேர்ந்தவர் ராமு மனைவி பங்கஜம், 66; இவருக்கு 2 சென்ட் வீட்டு மனையுடன் வீடு உள்ளது. இதனை அவரது மகன் புஷ்பராஜ், 45; என்பவர் தன் பெயருக்கு எழுதித் தரும்படி பங்கஜத்தை திட்டி தாக்கினார்.
விழுப்புரம் தாலுகா போலீசார் புஷ்பராஜ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

