/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அதி வேகமாக பைக் ஓட்டியவர் மீது வழக்கு
/
அதி வேகமாக பைக் ஓட்டியவர் மீது வழக்கு
ADDED : அக் 31, 2025 02:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்:  விபத்து ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக வாகனம் ஓட்டிய வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் காந்தி சிலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, நன்னாட்டாம்பாளையத்தை சேர்ந்த அரிதாஸ், 21; என்பவர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், விபத்து ஏற்படுத்தும் வகையிலும் அதிவேகமாக பைக் ஓட்டி வந்தது தெரியவந்தது.
விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து அரிதாைஸ கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

