/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் தி.மு.க.,வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
/
விழுப்புரத்தில் தி.மு.க.,வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
விழுப்புரத்தில் தி.மு.க.,வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
விழுப்புரத்தில் தி.மு.க.,வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
ADDED : அக் 01, 2024 07:17 AM

விழுப்புரம்: துணை முதல்வர், புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றதை வரவேற்று, விழுப்புரத்தில் தி.மு.க., சார்பில் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
சென்னையில், துணை முதல்வராக உதயநிதி பொறுப்பேற்றார். இதனை வரவேற்று விழுப்புரம் நகர தி.மு.க., சார்பில், நகர கட்சி அலுவலகத்தில் இருந்து, நகர செயலாளர் சக்கரை தலைமையில், தி.மு.க., வினர் ஊர்வலமாக சென்று, காந்திசிலை முன் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
விழுப்புரம் நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், கவுன்சிலர் கோமதி உள்ளிட்ட தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.
திண்டிவனம்
திண்டிவனத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
மாவட்ட செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். நகர செயலாளர் கண்ணன், நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், மாவட்ட பொருளாளர் ரமணன், பொதுக்குழு உறுப்பினர் கதிரேசன், செயற்குழு உறுப்பினர் சின்னசாமி.
மரக்காணம் ஒன்றிய துணைச் சேர்மன் பழனி, வழக்கறிஞர்கள் ஆதித்தன், கோபிநாத், புஷ்பராஜ், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ராஜா, ஆடிட்டர் பிரகாஷ், கவுன்சிலர்கள் ரேகா நந்தகுமார், பிர்லாசெல்வம், பார்த்திபன், சுதாகர், பரணிதரன், முகமதுஷபி, சதீஷ், லதாசாரங்கபாணி, அயலக அணி முஸ்தபா, மாவட்ட பிரதிநிதி முருகன், நகர துணை செயலாளர் கவுதமன், முன்னாள் கவுன்சிலர் சின்னதுரை , மீனவர் அணி ராஜேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.