sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மூத்த குடிமக்களை கவுரவிக்கும் விழா

/

மூத்த குடிமக்களை கவுரவிக்கும் விழா

மூத்த குடிமக்களை கவுரவிக்கும் விழா

மூத்த குடிமக்களை கவுரவிக்கும் விழா


ADDED : அக் 03, 2025 05:45 AM

Google News

ADDED : அக் 03, 2025 05:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் பவ்டா நிறுவனம் சார்பில் ஆயிரம் மூத்த குடிமக்களை கவுரவிக்கும் விழா நடந்தது.

விழுப்புரம் பவ்டா நிறுவனம் கடந்த 1985ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி தொடங்கப்பட்டு, சேவையாற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அனைத்து மாவட்டங்களிலும், கடந்தாண்டு வரை 80 வயதுக்கும் மேற்பட்ட 7,498 மூத்தக் குடிமக்களை கவுரப்படுத்தி நினைவு பரிசு வழங்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு, பவ்டா 41வது ஆண்டு துவக்க விழாவையொட்டி, 80 வயதுக்கு மேற்பட்ட 1000 மூத்த குடிமக்களை கவுரவிக்கும் விழா, விழுப்புரம் பவ்டா குழும தலைமை அலுவலகம் சார்பில் நேற்று நடந்தது.

விழுப்புரம் லோகலட்சுமி மண்டபத்தில் நடந்த விழாவிற்கு, பவ்டா குழும நிறுவனர் ஜாஸ்லின் தம்பி தலைமை தாங்கினார். இயக்குநர்கள் ஆசீர்ராஜா செல்வன், பிரகாஷ் முன்னிலை வகித்தனர். ஏ.ஜி.ஆலயம் அருள்திரு டிக்சன் இறைவேண்டல் பாடினார்.

கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான், எஸ்.பி., சரவணன், முன்னாள் அமைச்சர் பொன்முடி, எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா, முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம் ஆகியோர், 80 வயதிற்கு மேற்பட்ட 1000 மூத்த குடிமக்களுக்கு ஆடைகள், ஊட்டச்சத்துகள், பழங்கள், ஊன்றுகோல்கள் வழங்கியும், ராஜ கிரீடம் அணிவித்தும் கவுரவித்தனர்.

சமூக ஆர்வலர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், எழுத்தாளர்கள் வாழ்த்தினர். மூத்த குடிமக்களுக்கான இலவச சுகாதார முகாம் நடந்தது. பவ்டா முதன்மை கண்காணிப்பு அதிகாரி மாடசாமி நன்றி கூறினார். பவ்டா பணியாளர்கள் ஒருங்கிணைத்தனர்.






      Dinamalar
      Follow us