sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

டிராக்டர் மீது பைக் மோதல் இரு மாணவர்கள் உயிரிழப்பு

/

டிராக்டர் மீது பைக் மோதல் இரு மாணவர்கள் உயிரிழப்பு

டிராக்டர் மீது பைக் மோதல் இரு மாணவர்கள் உயிரிழப்பு

டிராக்டர் மீது பைக் மோதல் இரு மாணவர்கள் உயிரிழப்பு


ADDED : அக் 03, 2025 05:44 AM

Google News

ADDED : அக் 03, 2025 05:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை அருகே டிராக்டர் மீது பைக் மோதிய விபத்தில் 2 மாணவர்கள் இறந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்கரிப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் மகன் வாஞ்சிநாதன், 18; திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., 2ம் ஆண்டு படித்து வந்தார்.

விழுப்புரம் மாவட்டம், அவலுார்பேட்டை அடுத்த நொச்சலுார், கோவில்புரையூரைச் சேர்ந்தவர் சேட்டு மகன் ஞானேஸ்வரன்,16; அவலுார்பேட்டை ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.

உறவினரான இருவரும் நேற்று முன்தினம் இரவு பல்சர் பைக்கில் நொச்சலுாரில் இருந்து தாயானுாருக்கு சென்றனர். பைக்கை வாஞ்சிநாதன் ஓட்டினார்.

இரவு 7:30 மணியளவில் மோட்டூர் கிராமத்தின் வளைவு பகுதியில் சென்றபோது, பின்னோக்கி (ரிவர்சில்) வந்த பதிவெண் இல்லாத டிராக்டர் மீது பைக் மோதியது.

இதில், படுகாயமடைந்த வாஞ்சிநாதன் சம்பவ இடத்திலேயே இறந்தார். ஞானேஸ்வர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நள்ளிரவு 12:30 மணிக்கு இறந்தார்.

புகாரின் பேரில் அவலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us