/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விக்கிரவாண்டி அருகே விபத்தில் எரிந்த கார் சென்னை வாலிபர்கள் மூவர் பலி ; 2 பேர் படுகாயம்
/
விக்கிரவாண்டி அருகே விபத்தில் எரிந்த கார் சென்னை வாலிபர்கள் மூவர் பலி ; 2 பேர் படுகாயம்
விக்கிரவாண்டி அருகே விபத்தில் எரிந்த கார் சென்னை வாலிபர்கள் மூவர் பலி ; 2 பேர் படுகாயம்
விக்கிரவாண்டி அருகே விபத்தில் எரிந்த கார் சென்னை வாலிபர்கள் மூவர் பலி ; 2 பேர் படுகாயம்
ADDED : அக் 03, 2025 05:42 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே, சென்டர் மீடியன் மற்றும் லாரி மீது மோதி கவிழந்த கார் தீப்பற்றி எரிந்ததில் 3 வாலிபர்கள் உயிரிழந்தனர்; 2 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னை, திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் அஜீஸ், 25; தனியார் வங்கி ஊழியர். அதே பகுதியைச் சேர்ந்தவர் சம்சுதீன், 23; தனியார் நிறுவன ஊழியர். கொளத்துாரைச் சேர்ந்த தீபக், 25; தனியார் வங்கி ஊழியர். ரிஷி, 25; ஐ.டி., ஊழியர். ஆவடி, பட்டாபிராமபுரத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ், 25; தனியார் வங்கி ஊழியர்.
நண்பர்களான இவர்கள், ஆயுதபூஜை விடுமுறையைக் கொண்டாட மூணாறு சுற்றுலா செல்ல முடிவு செய்து, நேற்று அதிகாலை 4:45 மணிக்கு அஜீசுக்கு சொந்தமான ஹூண்டாய் வெர்ணா காரில் சென்னையில் இருந்து புறப்பட்டனர். காரை அஜீஸ் ஓட்டினார்.
காலை 6:40 மணியளவில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர் மீடியனில் மோதி, முன்னால் சென்ற டாரஸ் லாரி மீது மோதி கார் தலைகீழாக கவிழ்ந்தது.
காரிலிருந்து வெளியே வந்த அஜீஸ், முன் சீட்டில் அமர்ந்திருந்த சும்சுதீனை மீட்டபோது, தலையில் படுகாயமடைந்திருந்த சம்சுதீன் இறந்தது தெரிய வந்தது.
இதற்கிடையே அங்கிருந்த பொதுமக்கள் பின் சீட்டில் அமர்ந்திருந்த தீபக்கை மீட்டனர். அதற்குள் கார் தீப்பிடித்து எரிந்தது. தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் காரில் மயங்கிக் கிடந்த ரிஷி, மோகன்ராஜ் ஆகிய இருவரையும் மீட்க முடியவில்லை.
இதனால், இருவரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
படுகாயமடைந்த அஜீஸ், தீபக் ஆகிய இருவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிக்சைக்காக சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து தகவலறிந்த விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் தலைமையிலான போலீசார், தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் டோல் பிளாசா ஊழியர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைத்தனர். விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.