ADDED : ஆக 15, 2025 11:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி,; விக்கிரவாண்டி அருகே மூங்கீல்பட்டில் செங்கழுநீர் அம்மன் கோவிலில் தேர் திருவிழா நடந்தது.
இக்கோவிலில் கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் இரவு சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று தேர் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு பால் அபிேஷகம் நடந்தது.
பிற்பகல் 2:00 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் அருள்பாலித்தார். கிராம மக்கள் அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

