/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் நாளை கூட்டுறவு சங்க பணியாளர் நாள் நிகழ்ச்சி
/
விழுப்புரத்தில் நாளை கூட்டுறவு சங்க பணியாளர் நாள் நிகழ்ச்சி
விழுப்புரத்தில் நாளை கூட்டுறவு சங்க பணியாளர் நாள் நிகழ்ச்சி
விழுப்புரத்தில் நாளை கூட்டுறவு சங்க பணியாளர் நாள் நிகழ்ச்சி
ADDED : நவ 06, 2024 10:39 PM
விழுப்புரம்; விழுப்புரம் மண்டலத்தில் நாளை கூட்டுறவுச் சங்க பணியாளர் நாள் நிகழ்ச்சி நடக்கிறது.
கூட்டுறவு சங்க இணை பதிவாளர் பெரியசாமி செய்திக்குறிப்பு:
கூட்டுறவுத்துறை மானியக் கோரிக்கையின்பொது, துறை அமைச்சர் அறிவிப்பின்படி, விழுப்புரம் மண்டலத்தில் கூட்டுறவுச் சங்க இணை பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் அனைத்து வகையான, கூட்டுறவுச் சங்க பணியாளர்களுக்கான பணி தொடர்பாகவும், பணியின்போது அல்லது வேறு வகையிலும் ஏற்படும் குறைகளை பகிர்ந்திடவும், அக்குகறைகளை விதிகளுக்குட்பட்டு தீர்வு காணும் வகையில், பணியாளர் நாள் நிகழ்வு நாளை ( 8ம் தேதி ) பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணிவரை, விழுப்புரம் பெருந்திட்ட வளாக மண்டல கூட்டுறவுச் சங்க இணைபதிவாளர் அலுவலக கூட்டரங்கில், இணை பதிவாளர் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளர் தலைமையில் நடக்க உள்ளது. கூட்டுறவு சங்க பணியாளர்கள் குறைகள் தொடர்பாக மனு அளித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.