sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விழுப்புரம் மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் உரிய காலத்தில் முடிக்க கலெக்டர் அறிவுரை

/

விழுப்புரம் மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் உரிய காலத்தில் முடிக்க கலெக்டர் அறிவுரை

விழுப்புரம் மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் உரிய காலத்தில் முடிக்க கலெக்டர் அறிவுரை

விழுப்புரம் மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் உரிய காலத்தில் முடிக்க கலெக்டர் அறிவுரை


ADDED : மே 14, 2025 06:47 AM

Google News

ADDED : மே 14, 2025 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் நிலை குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது.

விழுப்புரம் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி, ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில், திண்டிவனத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் பஸ் நிலைய பணி, மரக்காணம் கீழ்புத்துப்பட்டில் இலங்கை தமிழர்களுக்கான வீடுகளின் கட்டுமான பணி, திண்டிவனம் சிப்காட் உணவுப் பூங்கா, பொதுப்பணித்துறை சார்பில் விக்கிரவாண்டி தாலுகா கீழக்கொந்தையில் நடக்கும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டுமானப்பணி, வெள்ளிமேடுபேட்டை செல்லும் சாலை அகலப்படுத்தும் பணி, திண்டிவனம் - மரக்காணம் சாலை அகலப்படுத்தும் பணி, செஞ்சி, வளவனூர், அரகண்டநல்லூர் பேரூராட்சிகளில் குடிநீர் பணி மேம்படுத்துதல் குறித்தும், முதலியார்குப்பம், செட்டிநகர், புதுக்குப்பம், அனிச்சங்குப்பம் மீனவ கிராமங்களில் மீன் இறங்குதளம் அமைக்கப்பட்டு வரும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

திண்டிவனம் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தும் பணி, விழுப்புரம் நகராட்சி பாதாள சாக்கடை திட்டப்பணிகள், செஞ்சி அரசு கலை அறிவியல் கல்லூரி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி 100 படுக்கை வசதிகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் தாமதம் குறித்து விளக்கம் கேட்கப்பட்டு, பணிகளை விரைவாகமுடிக்க அறிவுறுத்தப்பட்டது. டி.ஆர்.ஓ., (நெடுஞ்சாலை) ராஜ்குமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us