ADDED : டிச 06, 2024 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் மகாராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் மகள் கோபிகா,18; இவர், வெளியூரில் உள்ள தனியார் கல்லுாரியில் இன்ஜினியரிங் முதலாமாண்டு படித்து வருகிறார். விடுமுறைக்கு விழுப்புரத்தில் உள்ள வீட்டிற்கு வந்த அவர், மீண்டும் இரு தினங்களுக்கு முன் கல்லுாரிக்கு புறப்பட்டு சென்றவர், கல்லுாரிக்கு செல்லவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.