/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கல்லுாரி மாணவி மாயம்: போலீஸ் விசாரணை
/
கல்லுாரி மாணவி மாயம்: போலீஸ் விசாரணை
ADDED : செப் 21, 2024 05:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே கல்லுாரி மாணவி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வளவனுார் அடுத்த பெத்துரெட்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கராஜன் மகள் ரஞ்சினி, 19; இவர், விழுப்புரத்தில் தனியார் மகளிர் கல்லுாரியில் பி.பி.ஏ., முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த 18ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற ரஞ்சினி மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.