ADDED : ஜூன் 20, 2025 11:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார் : கல்லுாரிக்குச் சென்ற மகளைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.
வானுார் அடுத்த வாழப்பட்டாம்பாளையத்தைச் சேர்ந்தவர் செல்வம் மகள் ராகவி, 18; வானுார் அரசு கலை கல்லூரியில் பி.காம்., 2ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் கல்லுாரிக்கு சென்ற ராகவி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தந்தை செல்வம், ஆரோவில் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, காணாமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.