ADDED : டிச 08, 2025 06:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: காணை அருகே கல்லுாரி மாணவி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கண்டாச்சிபுரம் அடுத்த குயவன்காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன், 50; இவரது மகள் எழிலரசி, 18; விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில் பி.இ., முதலாமாண்டு படித்து வருகிறார்.
கடந்த மாதம் 27ம் தேதி வீட்டிலிருந்து, கல்லுாரிக்கு சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

