ADDED : செப் 23, 2024 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே தம்பியைக் காணவில்லை என அண்ணன், போலீசில் புகார் அளித்துள்ளார்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சரவணம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசிங் மகன் ஜெகதீஸ்வரன், 36; இவர், கடந்த 20ம் தேதி இரவு வீட்டிலிருந்து பெட்ரோல் பங்க் செல்வதாக கூறிச் சென்றவர். வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
அவரது அண்ணன் அளித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.