ADDED : செப் 28, 2025 03:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: மணல் கடத்திய மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை காந்திகுப்பம் மலட்டாறு பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அப்பகுதியில் மணல் கடத்தியவர்கள் போலீசாரை கண்டதும் மாட்டு வண்டியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி சென்றனர்.
போலீசார் மணல் கடத்தி வைத்திருந்த மாட்டு வண்டியை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.