நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்,: விழுப்புரம் மத்திய மாவட்ட காங்., சார்பில், வளவனுாரில் நமது இந்தியா பாதயாத்திரை நடந்தது.
வளவனுார் நகர தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். அகில இந்திய உறுப்பினர் ராமமூர்த்தி சிறப்புரையாற்றினார்.
முன்னதாக நகர அலுவலகத்தில் உள்ள காந்தி, நேரு, காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, பாதயாத்திரை துவங்கியது. பக்கம்மேடு, அற்பிசம்பாளையம், தாதாம்பாளையம், புதுப்பாளையம், காந்திநகர், மோட்சகுளம் வழியாக சென்று சிறுவந்தாடு, மந்தகரையில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, பாதயாத்திரையை நிறைவு செய்தனர்.
யாத்திரையின் போது சிறுவந்தாடு, காந்தி நகர் ஏரியில் பனை விதைகள் நடப்பட்டது. காங்., கட்சியினர் பங்கேற்றனர்.

