sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கால்பந்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

/

கால்பந்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

கால்பந்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

கால்பந்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு


ADDED : நவ 05, 2025 10:53 PM

Google News

ADDED : நவ 05, 2025 10:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டாச்சிபுரம்: விழுப்புரம் வருவாய் மாவட்ட அளவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் கண்டாச்சிபுரம் அரசுப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.

விழுப்புரம் வருவாய் மாவட்ட அளவில் பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் நடைபெற்ற கால்பந்து போட்டியில் 17 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் கண்டாச்சிபுரம் அரசுப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.

இதன் மூலம் கண்டாச்சிபுரம் அரசுப் பள்ளி மாணவரகள் மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

நேற்று காலை பள்ளியின் விளையாட்டரங்கில், கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்து.

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.உதவி தலைமை ஆசிரியர் முருகவேல், உடற்கல்வி இயக்குனர் சுரேஷ் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி ஆசிரியர் ஜான்சன் வரவேற்றார்.தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயசீலன் மாநில கால்பந்து போட்டிக்கு தேர்வு பெற்ற மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

முதுகலை ஆசிரியர்கள் அருண்குமார், மஞ்சுநாதன், வெங்கடேசன், பார்த்தீபன் மாணவர்கள் பாராட்டி பேசினர். இதில், ஆசிரியர்கள் சத்யவதி,ரவி மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். கணினி ஆசிரியர் குரு நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us