ADDED : ஏப் 17, 2025 05:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: மத்திய அரசை கண்டித்து, திண்டிவனத்தில் காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
நேஷனல் ஜெரால்டு வழக்கில், முன்னாள் காங்., தலைவர்கள் சோனியா, ராகுல் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதை கண்டித்து, திண்டிவனம் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்., தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். திண்டிவனம் நகர தலைவர் விநாயகம் முன்னிலை வகித்தார்.
வட்டார தலைவர்கள் காத்தவராயன், செல்வம், விக்கிரவாண்டி நகர தலைவர் குமார், நிர்வாகிகள் வெங்கட், உதயனன், நகர துணை தலைவர் தட்சிணாமூர்த்தி, நிர்வாகிகள் ராமமூர்த்தி, ஜெய்கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.