தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கட்டுமான பொருட்களை திருடியவர் கைது

 கட்டுமான பொருட்களை திருடியவர் கைது

 கட்டுமான பொருட்களை திருடியவர் கைது


ADDED : ஜூலை 05, 2026 03:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 05, 2026 03:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

செஞ்சி: செஞ்சி அருகே 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கட்டுமானப் பொருட்களை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்துாரைச் சேர்ந்தவர் திருமலை மகன் ஜானகிராமன், 32; பில்டிங் காண்ட்ராக்டர். இவர், செஞ்சி அடுத்து காமகரம் கிராமத்தைச் சேர்ந்த சங்கரநாராயணன் என்பவருக்கு காண்ட்ராக்ட் முறையில் வீடு கட்டி வருகிறார்.

இவர் வீடு கட்டி வரும் இடத்தில் வைத்திருந்த 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 29 பெட்டி டைல்ஸ், 9 பெட்டி மின் ஒயர்கள், 12 இரும்பு சீட்டுகள் சில தினங்களுக்கு முன் திருடு போனது.

இதுகுறித்த புகாரின் பேரில், நல்லாண்பிள்ளை பெற்றாள் போலீசார் வழக்குப்பதிந்து நடத்திய விசாரணையில், காமகரத்தைச் சேர்ந்த முனியப்பன், 51; அவரது 17 வயது மகனும் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து முனியப்பனை போலீசார் கைது செய்து அவரது மகனை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us