/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கட்டட தொழிலாளி மயங்கி விழுந்து பலி
/
கட்டட தொழிலாளி மயங்கி விழுந்து பலி
ADDED : டிச 15, 2024 10:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; விழுப்புரம் அருகே கட்டட தொழிலாளி மயங்கி விழுந்து இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த புதுசித்தாமூரைச் சேர்ந்தவர் மணிகண்டன், 32; கட்டட தொழிலாளி. குடிப்பழக்கம் உடைய இவர், நேற்று முன்தினம் இந்திரா நகர் பைபாஸ் சாலை அருகே குடிபோதையில் மயங்கி விழுந்து இறந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி தமிழரசி அளித்த புகாரின் பேரில், மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.