/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கட்டட தொழிலாளி மாயம் போலீஸ் விசாரணை
/
கட்டட தொழிலாளி மாயம் போலீஸ் விசாரணை
ADDED : செப் 19, 2024 11:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: வளவனுார் அருகே கட்டட தொழிலாளி காணாமல்போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பனங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுவேல் மகன் சிவா, 41; கட்டட தொழிலாளி.
குடிப்பழக்கம் உடைய இவர், கடந்த 10ம் தேதி காலை, வேலைக்குச் சென்று வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை.
அவரது மனைவி சித்ரா, 37; அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.