sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பயிர்களுக்கு காப்பீடு திட்டம் அறிவிப்பு: வேளாண் அதிகாரி அழைப்பு

/

பயிர்களுக்கு காப்பீடு திட்டம் அறிவிப்பு: வேளாண் அதிகாரி அழைப்பு

பயிர்களுக்கு காப்பீடு திட்டம் அறிவிப்பு: வேளாண் அதிகாரி அழைப்பு

பயிர்களுக்கு காப்பீடு திட்டம் அறிவிப்பு: வேளாண் அதிகாரி அழைப்பு

1


ADDED : நவ 11, 2024 05:37 AM

Google News

ADDED : நவ 11, 2024 05:37 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தில், இந்தாண்டுக்கு 2024-25 அறிவிக்கப்பட்டுள்ள சம்பா நெல் மற்றும் ரபி பருவத்தில் உளுந்து, வேர்க்கடலை, எள் மற்றும் கரும்பு பயிர்களுக்கு, பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பயிர் இழப்பினை ஈடுசெய்வதற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்பதற்காகவும், விழுப்புரம் மாவட்டத்தில் 2024-25ம் ஆண்டு சாகுபடி செய்யும் காரீப், சம்பா மற்றும் ரபி பருவத்தில் பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மாவட்டத்தில், சம்பா பருவத்திற்கு 13 தாலுகாக்களில் உள்ள 794 வருவாய் கிராமங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.

சம்பா பருவத்தில் நெல் நடவு செய்துள்ள விவசாயிகள் வரும் 15ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். மாவட்டத்திற்கு பயிர் காப்பீட்டு நிறுவனமாக யுனிவர்சல் சோம்போ ஜெனரல் இன்சூரன்ஸ் என்ற நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நெல் ரகம் 2க்கு, விவசாயி செலுத்த வேண்டிய பிரீமிய தொகை ஏக்கருக்கு 517.50 ரூபாய், வரும் 15ம் தேதி கடைசி தேதி ஆகும். உளுந்து பயிருக்கு பிரீமியம் தொகை 231 ரூபாய். 30ம் தேதி கடைசி தேதி.

வேர்க்கடலை பயிருக்கு 442.50 ரூபாய். வரும் 2025ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி கடைசி தேதி. எள் பயிருக்கு 165 ரூபாய் வரும் ஜனவரி 31ம் தேதி கடைசி. கரும்பு பயிருக்கு, 1,045 ரூபாய் செலுத்த வேண்டும். இதற்கு கடைசி தேதி 2025ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி ஆகும்.

பொது சேவை மையங்கள், வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாக, காப்பீட்டுத் தொகை செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.

பதிவுக்கான ஆவணங்களாக நடப்பு பருவ அடங்கல், சிட்டா, வங்கி கணக்கு புத்தகம், ஆதார் எண் ஆகியவற்றுடன் பதிவு செய்யும் விவசாயியின் பெயர், நிலப்பரப்பு, சர்வே எண், உட்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகிய விவரங்களை சரியாக அளித்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மேலும், விபரங்களை அறிய அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம்.

இத்தகவலை விழுப்புரம் வேளாண் இணை இயக்குனர் (பொறுப்பு) சீனிவாசன் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us