ADDED : மார் 15, 2025 08:31 PM
விழுப்புரம்; விழுப்புரத்தில் பங்காரு அடிகளார் அவதார திருநாளையொட்டி, பெஞ்சல் புயலால் பாதித்தவர்களுக்கு 7.50 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் 85வது அவதார திருநாளை முன்னிட்டு, விழுப்புரம் தெற்கு வண்டிமேடு பகுதி ஆதிபராசக்தி ஆன்மீக வழிபாட்டு மன்றம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க விழுப்புரம் மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். பொருளாளர் மணிவாசகம் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக தனி தாசில்தார் கண்ணன் பங்கேற்றார். 41 பயனாளிகளுக்கு தையல் மெஷின், லேப்டாப், சைக்கிள், கிரைண்டர் உள்ளிட்ட 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் மற்றும் 6 லட்சத்து 45 ஆயிரம் நிவாரண தொகையும் வழங்கப்பட்டது.
இயக்கத்தின் தணை தலைவர்கள் பாலசுப்பரமணியன், மோகனகிருஷ்ணன், பார்த்தசாரதி, மகளிர் அணி லலிதா,வேள்வி குழு அசோக்குமார், கற்பகம் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.