ADDED : அக் 14, 2024 08:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரக்காணம் : மரக்காணம் அருகே மகளைக் காணவில்லை என தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.
மரக்காணம் அடுத்த அனுமந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகள் பச்சையம்மாள், 19; இவர் அதே ஊரில் உள்ள ஜவுளிக் கடையில் வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்த அவரது தாய் அமுல் அளித்த புகாரின் பேரில், மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.