ADDED : அக் 23, 2024 09:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: வளவனுார் அருகே பணிக்கு சென்ற மகளை காணவில்லை என தாய் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
வளவனுார் அருகே ஓட்டேரிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகள் வித்யா,26; இவர், விழுப்புரத்தில் உள்ள தனியார் டேட்டா என்ட்ரி மையம் ஒன்றில் பணி செய்து வந்துள்ளார்.
வழக்கம் போல், கடந்த 21ம் தேதி வீட்டிலிருந்து பணிக்கு சென்ற வித்யா மீண்டும் வரவில்லை. அவரை பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது தாய் அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.