நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்:  தீக்குளித்த கொத்தனார், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
விழுப்புரம் அடுத்த மேல்பாதியை சேர்ந்தவர் பூமிநாதன், 40; கொத்தனார். இவர் கடந்த, 25ம் தேதி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
இதில், படுகாயமடைந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார்.
வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

