sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஊராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல் எஸ்.பி., அலுவலகத்தில் புகார்

/

ஊராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல் எஸ்.பி., அலுவலகத்தில் புகார்

ஊராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல் எஸ்.பி., அலுவலகத்தில் புகார்

ஊராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல் எஸ்.பி., அலுவலகத்தில் புகார்


ADDED : ஆக 22, 2025 10:07 PM

Google News

ADDED : ஆக 22, 2025 10:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : கஞ்சா விற்பனை குறித்து தகவல் தெரிவித்ததால் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக, கிராம மக்களுடன் எஸ்.பி., அலுவலகத்தில் ஊராட்சி தலைவர் மனு கொடுத்தார்.

கண்டாச்சிபுரம் அடுத்த ஒட்டம்பட்டு ஊராட்சி தலைவர் முருகன், 46; இவர் கிராம மக்களுடன், எஸ்.பி., அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:

கஞ்சா போன்ற போதை பொருட்கள் நடமாட்டம் இருந்தால் தகவல் கொடுக்குமாறு போலீஸ் அதிகாரிகள் கூறினர். அதன்பேரில், வாய்மொழியாக நான் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தேன். இதனால், எங்கள் கிராமத்தை சேர்ந்த கஞ்சா வியாபாரி குடும்பத்தினர், எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

இது குறித்து அரகண்டநல்லுார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து, 10 நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை. பாதுகாப்பு கொடுக்க வேண்டிய இன்ஸ்பெக்டர், என்னை பயமுறுத்துகிறார்.

எனவே, இன்ஸ்பெக்டர் மற்றும் கொலை மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us