நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: நெல்கொள்முதல் பணியை தனியாரிடம் வழங்குவதைக் கண்டித்து, சிவில் சப்ளை கார்ப்பரேஷன் ஒர்கர்ஸ் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரத்தில், அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில தலைவர் சண்முகவேல் தலைமை தாங்கினார். நிர்வாகிகள், சங்கத்தினர் பங்கேற்றனர்.
தமிழகத்தில் டெல்டா அல்லாத மண்டலங்களில், அரசு நெல் கொள்முதல் செய்யும் பணியை, வரும் சம்பா பருவம் முதல் தனியாரிடம் ஒப்படைக்க உள்ளதை கைவிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.