sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

செய்வினையை முறியடிக்கும் பூட்டு போட்டு வேண்டுதல் வைக்கும் பக்தர்கள்

/

செய்வினையை முறியடிக்கும் பூட்டு போட்டு வேண்டுதல் வைக்கும் பக்தர்கள்

செய்வினையை முறியடிக்கும் பூட்டு போட்டு வேண்டுதல் வைக்கும் பக்தர்கள்

செய்வினையை முறியடிக்கும் பூட்டு போட்டு வேண்டுதல் வைக்கும் பக்தர்கள்


ADDED : ஏப் 22, 2025 04:45 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 04:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இறைவனிடம் வேண்டுவதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையை கடைபிடிக்கின்றனர். சிலர் காணிக்கை செலுத்தி வேண்டுதல் வைக்கின்றனர். சிலர் வேண்டுதல் நிறைவேறியதும் காணிக்கை செலுத்துகின்றனர்.

பக்தர்கள் தங்களின் நம்பிக்கைக்கு ஏற்ப பல வகைகளில் வேண்டுதலை நிறைவேற்றும்படி கோரிக்கை வைக்கின்றனர். செஞ்சியில், சங்கராபரணி ஆற்று பாலம் அடுத்த சேத்துப்பட்டு ரோட்டின் துவக்கத்தில் உள்ள யோகமுனீஸ்வரரிடம் பக்தர்கள் பூட்டு போட்டு கோரிக்கை வைக்கின்றனர்.

உறவினர், தொழில் எதிரிகள் செய்வினை செய்து இருப்பதாக சந்தேகம் எழும் பக்தர்கள், யோக முனீஸ்வரர் கோவிலில் உள்ள சூலத்தில் பூட்டு போட்டு தங்களுக்கு எந்த கெடுதலும் நேரக்கூடாது என வேண்டிக் கொள்கின்றனர்.

இதனால் செய்வினையால் ஏற்படும் தீமை தங்களை அண்டாது என நம்புகின்றனர்.

இது மட்டுமின்றி, தனக்கு கட்டுப்படாத கணவனை தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதற்காக பெண்களும், மனைவியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டி கணவர்களும் பூட்டு போட்டு வழிபடுகின்றனர்.

தொழில் ரீதியாக கோர்ட்டு வழக்குகள், தொழில் போட்டியாளர்களை எதிராக செயல்பட விடாமல் தடுக்கவும் பூட்டு போட்டு வேண்டிக் கொள்கின்றனர். கோரிக்கை நிறைவேறியதும் சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.






      Dinamalar
      Follow us