/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி வினா போட்டி
/
'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி வினா போட்டி
ADDED : நவ 28, 2025 05:11 AM

விழுப்புரம்: 'தினமலர் - பட்டம்' இதழ், ஆச்சார்யா கல்விக்குழுமம் இணைந்து நடத்தும், 'பதில் சொல்; பரிசு வெல்' வினாடி வினா போட்டி, விழுப்புரம் வி.பாளையம் சரஸ்வதி சென்ட்ரல் சி.பி.எஸ்.இ., பள்ளியில் நடந்தது.
போட்டியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அதில், 16 மாணவர்கள் தேர்வு செய்து, 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு, அவர்களுக்கு 2 சுற்றுகளாக போட்டிகள் நடந்தது.
சரஸ்வதி கல்வி குழுமம் தாளாளர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். பொருளாளர் சிதம்பரநாதன், சி.பி.எஸ்.இ., பள்ளி தாளாளர் முத்து சரவணன், பள்ளி முதல்வர் சுபஸ்ரீ முன்னிலை வகித்தனர்.
போட்டியில், 9ம் வகுப்பு மாணவர் பிரகதீஷ்வருண், 7ம் வகுப்பு மாணவர் காமேஷ் ஆகியோர் முதலிடம் பிடித்தனர். 9ம் வகுப்பு மாணவர்கள் ரீத்திஷ்பரத், கமலேஷ் இரண்டாம் இடம் பிடித்தனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் சற்குணாவதி, ஷர்மிளா பங்கேற்றனர்.

