/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி வினா போட்டி
/
'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி வினா போட்டி
ADDED : டிச 12, 2025 05:56 AM

திண்டிவனம்: 'தினமலர்-பட்டம்' இதழ், ஆச்சார்யா கல்விக்குழுமம் இணைந்து நடத்தும், 'பதில் சொல்; பரிசு வெல்' வினாடி வினா போட்டி, திண்டிவனம் ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.
போட்டியில், 50க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவிகள் தேர்வு செய்து, 8 குழுக்களாக பிரித்து 2 சுற்றுகளாக போட்டி நடந்தது. பள்ளியின் தலைமையாசிரியர் சுதர்சனன் தலைமை தாங்கினார்.
போட்டியில் 9ம் வகுப்பு மாணவிகள் ஜெயஸ்ரீ, ஜோதினி முதலிடத்தையும், 8ம் வகுப்பு மாணவிகள் தீபலட்சுமி, ரேணுமதி இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.
வெற்றி பெற்ற மாணவிகளுக்கு திண்டிவனம் ேஹாஸ்ட் லயன் சங்கத் தலைவர் சுகுமார், செயலாளர்கள் புஷ்பராஜ், பாலமுருகன், பொருளாளர் பாலாஜி ஆகியோர் சான்றிதழ், கேடயம் வழங்கினர்.
நிகழ்ச்சியில், பள்ளிக்குழு தலைவர் நரசிம்மன், செயலாளர் நாகராஜகுப்தா, உறுப்பினர் ராஜாராம், லயன் சங்க நிர்வாகிகள் மாவட்ட தலைவர்கள் கார்த்திக் கருணாகரன், சஞ்சீவி, ஆசிரியர்கள் சத்தியநாராயணன், ராஜேஸ்வரி, சிகாமணி, பூங்கொடி பங்கேற்றனர்.
விழுப்புரம் விழுப்புரம், வழுதரெட்டி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த போட்டிக்கு, தலைமை ஆசிரியர் கதிர்வேல் தலைமை தாங்கினார். விழுப்புரம் சரஸ்வதி கல்விக் குழும தாளாளர் ராஜசேகரன், பொருளாளர் சிதம்பரநாதன், சி.பி.எஸ்.இ., பள்ளி தாளாளர் முத்துசரவணன் முன்னிலை வகித்தனர்.
இப்போட்டியில், 7ம் வகுப்பு மாணவிகள் ஷர்மி, அபிநயா முதலிடம் பிடித்தனர். 8ம் வகுப்பு மாணவர் விஷ்ணுபிரசாத், 7ம் வகுப்பு மாணவர் ஹரிஹரன் இரண்டாம் இடம் பிடித்தனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் கதிர்வேல் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. அறிவியல் ஆசிரியர் அமரேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

