sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

'தினமலர்' நாளிதழ் நடத்தும் நீட் மாதிரி தேர்வு; விழுப்புரத்தில் வரும் 27ம் தேதி நடக்கிறது

/

'தினமலர்' நாளிதழ் நடத்தும் நீட் மாதிரி தேர்வு; விழுப்புரத்தில் வரும் 27ம் தேதி நடக்கிறது

'தினமலர்' நாளிதழ் நடத்தும் நீட் மாதிரி தேர்வு; விழுப்புரத்தில் வரும் 27ம் தேதி நடக்கிறது

'தினமலர்' நாளிதழ் நடத்தும் நீட் மாதிரி தேர்வு; விழுப்புரத்தில் வரும் 27ம் தேதி நடக்கிறது


ADDED : ஏப் 15, 2025 08:59 PM

Google News

ADDED : ஏப் 15, 2025 08:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்; 'தினமலர்' நாளிதழ், சரஸ்வதி சி.பி.எஸ்.இ., சீனியர் செகண்டரி பள்ளி இணைந்து நடத்தும், நீட் மாதிரி தேர்வு வரும் 27ம் தேதி விழுப்புரத்தில் நடக்கிறது.

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு, வரும் மே 4ம் தேதி நடக்கிறது.

தமிழகம், புதுச்சேரியில் 'நீட்' நுழைவு தேர்விற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் டாக்டர் கனவை நிறைவேற்றிட தினமலர் நாளிதழ், சரஸ்வதி சி.பி.எஸ்.இ., சீனியர் செகண்டரி பள்ளி இணைந்து நீட் மாதிரி தேர்வை நடத்த உள்ளது.

இந்த மாதிரி தேர்வு வரும் 27ம் தேதி காலை 10.00 மணி முதல் மதியம் 1:20 மணி வரை, விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டு மெயின் ரோடு, வி.பாளையத்தில் உள்ள சரஸ்வதி சி.பி.எஸ்.இ., சீனியர் செகண்டரி பள்ளியில் நடக்கிறது.

தேர்வில் பங்குபெற விரும்பும் மாணவர்கள் 95247 81197 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை பெயர், முழு விலாசம், மொபைல் எண் மற்றும் இ மெயில் முகவரியை முன்பதிவு செய்ய வேண்டும்.

ஆங்கிலம் மற்றும் தமிழில் வினாத்தாள் வழங்கப்படும். தேர்வுக்கான பதிவு எண் தங்களின் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்.

மாதிரி 'நீட்' தேர்வு என்றாலும், தேசிய தேர்வு முகமை நடத்தும் அசல் தேர்வு போன்றே நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, தேசிய தேர்வு முகமை விதித்துள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் 'தினமலர்' நீட் மாதிரி நுழைவு தேர்விலும் பின்பற்றப்பட உள்ளது.

எனவே 'நீட்' தேர்வில் பங்கேற்போர் காலை 9:45 மணிக்கு தேர்வு அறையில் இருக்க வேண்டும். தேர்வு நேரம் முடியும் முன் வெளியே செல்ல அனுமதியில்லை.

நீட் தேர்வுக்கு பல ஆண்டுகளாக பயிற்சி அளித்து வரும் அனுபவம் வாய்ந்த சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து, ஒவ்வொரு கேள்விகளும் வடிவமைக்கப்பட்டுள்ளதால், தேசிய தேர்வு முகமையில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்து காத்திருக்கும் மாணவர்களுக்கு 'தினமலரின் நீட் மாதிரி தேர்வு' தங்களை சுயமாக பரிசோதித்து கொள்ள அரியவாய்ப்பு.

எனவே, மாணவ, மாணவியர் பதிவு செய்து, தேர்வில் பங்கேற்கலாம்.






      Dinamalar
      Follow us