ADDED : ஜூலை 19, 2011 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லூர் : திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பெரிய செவலையில் கரும்பு விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
விவசாயிகள் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் ரகோத்தமன் தலைமை தாங்கினார். சிவலிங்கம், ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். ஏழுமலை வரவேற்றார். கரும்பு டன்னுக்கு 3 ஆயிரம் ரூபாய் வழங்கவேண்டும், அனைத்து கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் கடனை அரசு செய்யவேண்டும், கரும்பு வெட்டும் தொழிலாளர் களுக்கு இன்ஸ்சூரன்ஸ் பிரிமியத்தை ஆலை நிர்வாகம் செலுத்த வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. கலிவரதன், குமரேவல், கணேசன், சுப்ராயன் ரமேஷ், ரவி, பன்னீர் செல்வம், கேசவன் பங்கேற்றனர்.