/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாணவர்களுக்கு போக்குவரத்து ஆய்வாளர் எச்சரிக்கை : விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை
/
மாணவர்களுக்கு போக்குவரத்து ஆய்வாளர் எச்சரிக்கை : விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை
மாணவர்களுக்கு போக்குவரத்து ஆய்வாளர் எச்சரிக்கை : விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை
மாணவர்களுக்கு போக்குவரத்து ஆய்வாளர் எச்சரிக்கை : விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை
ADDED : ஆக 23, 2011 11:47 PM
விழுப்புரம் : விழுப்புரத்தில் விதிகளை மீறி வாகனங்களை இயக்கிய மாணவர்கள்
உள்ளிட்ட வாகன ஓட்டிகள் மீது வட்டார போக்குவரத்து துறையினர் நடவடிக்கை
எடுத்தனர்.
விழுப்புரத்தில் விதிகளை மீறிய வகையில் வாகன ஓட்டிகளும்,
ஓட்டுனர் உரிமம் இல்லாத நிலையில் மாணவர்களும் அதிகளவில் இரு சக்கர
வாகனங்களில் சென்று வருவது அதிகரித்துள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள்
ஏற்பட்டு உயிர் இழப்பு சம்பவமும் தொடர் கிறது. இது குறித்து பத்திரிகைகளில்
செய்திகள் வெளியிடப்பட்டது. இதனையடுத்து வட்டார போக்குவரத்து துறையினர்
மற்றும் போக்குவரத்து போலீசார் விதிகளை மீறுகின்ற வாகன ஓட்டிகள் மீது
அதிரடி நடவடிக்கைகளை துவக்கியுள்ளனர். வட்டார போக்குவரத்து ஆய்வாளர்
அருணாசலம் நேற்று காலை கிழக்குப் பாண்டி ரோட்டில் வாகனங்களை நிறுத்தி
திடீர் ஆய்வு செய்தார். அப்போது அருகே உள்ள தனியார் பள்ளிகளுக்கு மோட்டார்
சைக்கிளில் வந்த மாணவ, மாணவிகள் ஓட்டுனர் உரிமம் இன்றி வந்தது தெரிந்தது.
மேலும் அந்த வழியாக வந்த புதுச்சேரி மாநில பதிவெண் கொண்ட வாகனங்கள்,
அனுமதியின்றி வந்த செங்கல் ஏற்றிய டிராக்டர், ஓட்டுனர் உரிமம், உரிய
ஆவணங்கள் இன்றி வந்த வாகனங்களை பிடித்த வட்டார போக்குவரத்து துறையினர்
அவர்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுத்தனர். நடவடிக்கை குறித்து
ஆய்வாளர் அருணாச்சலம் கூறும்போது, ஓட்டுனர் உரிமம் பெறும் வயதைக் கூட
நிரம்பாத மாணவ, மாணவிகள் அதிகளவில் இரு சக்கர வாகனங்களில் வந்து
செல்கின்றனர். ஓட்டுனர் உரிமங்கள் இன்றி வாகனங்கள் ஓட்டி வரும் மாணவர்கள்
மீது, இனி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விதிகளை மீறும் வாகன ஓட்டிகள்
மீதும் வழக்கு பதிவதோடு வாகனங்களையும் பறிமுதல் செய்து நடவடிக்கை
எடுக்கப்படும். விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் தொடர்ந்து
போக்குவரத்து நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் பள்ளி வாயில் பகுதியை
வைத்துள்ள தனியார் பள்ளி நிர்வாகத்தினர் அதனை மாற்றிக் கொள்ள வேண்டும்.
தவறும்பட்சத்தில் அங்கு ஏற்படும் விபத்துகளுக்கு அவர்கள் தான் பொறுப்பேற்க
வேண்டி வருமென ஆய்வாளர் அருணாச்சலம் தெரிவித்தார்.