ADDED : ஜூலை 04, 2026 03:40 AM

அ நிறம் | அளவு
செஞ்சி: செஞ்சியில் மத்திய அரசின் புதிய வேலை வாய்ப்புத் திட்டத்தை எதிர்த்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தாலுகா அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வட்ட தலைவர் முனுசாமி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் முருகன் துவக்கி வைத்தார்.
நிர்வாகிகள் சுரேஷ், ராஜேந்திரன், பாத்திமாபீவி, சிவசங்கரன், கோமதி மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றம் செய்ததை கண்டித்து இதற்கான அரசாணையை கிழித்தெறிந்தும், மாற்றுத் திறனாளிகளுக்கு கருவிழி, கைரேகை பதிவு இல்லாமல் வேலை வழங்க வேண்டும். வேலை கேட்கும் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் வேலை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
