/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
5000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
/
5000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
5000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
5000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
ADDED : அக் 26, 2024 07:34 AM

செஞ்சி : செஞ்சி அருகே 5000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த கப்பை கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவர் கொடுத்த தகவலின் பேரில் விழுப்புரத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன், செஞ்சி நுாலகர் பூவழகன் ஆகியோர் கப்பை கிராமத்தில் உள்ள மலைப்பகுதியில் ஆய்வு செய்தனர்.
அப்போது, 5000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் இருப்பதை கண்டறிந்தனர்.
இதுகுறித்து செங்குட்டுவன் கூறியதாவது:
கப்பை கிராமத்தில் மலைப் பகுதியில் ஆய்வு செய்தில் இங்குள்ள குகை தளத்தில் தொன்மையான பழங்கால ஓவியங்கள் இருப்பது தெரியவந்தது. மனிதன் மற்றும் விலங்கின உருவங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
பெரும்பாலான ஓவியங்கள் வெள்ளை நிறத்தில் வரையப்பட்டுள்ளன.சிவப்பு நிறத்தில் வரையப்பட்ட ஓவியங்கள் ஆங்காங்கே மங்கலாகத் தெரிகிறது. ஒரு மனிதன் இரண்டு கைகளையும் துாக்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஓவி யம் சிறப்பானதாக உள்ளது.
மேலும் இந்த ஓவிய தொகுப்பில் காவி நிறத்தில் இடம்பெற்றுள்ள கை ஓவியம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகளில் காணப்படும் இத்தகைய ஓவியம் தமிழ்நாட்டில் விழுப்புரம் அடுத்த ஆலம்பாடி பாறை ஓவியங்களில் இடம் பெற்றுள்ளது.
கப்பை கிராமத்தில் உள்ள பாறை ஓவியங்கள் 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. அக்கால மக்களின் வாழ்வியல், பண்பாட்டை நமக்குச் சொல்பவை. இங்குள்ள பெரும்பாலான ஓவியங்கள் மங்கி மறைந்து விட்டன. இவ்வாறு செங்குட்டுவன் கூறினார்.