ADDED : நவ 21, 2025 05:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட நுாலகத்தில், நுாலக வார விழாவை முன்னிட்டு, போட்டி தேர்வு மாணவர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
நுாலக அலுவலர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.
நுாலகர் இளஞ்செழியன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் பயிற்சி கலெக்டர் வெங்கடேஸ்வரன், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து, மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடி, ஆலோசனை வழங்கினார்.
போட்டித் தேர்வில் தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கு, புத்தகங்கள் வழங்கப்பட்டன.

