ADDED : மே 02, 2025 05:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டு போட்டிகள், ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடந்தது.
விழுப்புரத்தில் ஏப்ரல் 29, 30 ஆகிய 2 நாட்கள் நடந்த போட்டியில், 40 மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். நிறைவு நாள் பரிசளிப்பு விழாவிற்கு மாவட்ட கேரம் விளையாட்டு கழக தலைவர் சோழன் தலைமை தாங்கினார்.
ஜான்டூயி பள்ளி நிர்வாகிகள் வீரதாஸ், எமர்சன் ராபின், ஊர்காவல் படை மண்டல தளபதி நத்தர்ஷா முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர் எஸ்.பி., சரவணன், போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். போட்டியை விஜயராஜ், பாபு, தர்மராஜ், குழந்தை வேலு, நித்தின்ஜோஷ்வா, இளஞ்செழியன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர். மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.

