/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., கூட்டணி கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம்; திரளாக பங்கேற்க மாவட்ட பொறுப்பாளர் அழைப்பு
/
தி.மு.க., கூட்டணி கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம்; திரளாக பங்கேற்க மாவட்ட பொறுப்பாளர் அழைப்பு
தி.மு.க., கூட்டணி கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம்; திரளாக பங்கேற்க மாவட்ட பொறுப்பாளர் அழைப்பு
தி.மு.க., கூட்டணி கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம்; திரளாக பங்கேற்க மாவட்ட பொறுப்பாளர் அழைப்பு
ADDED : பிப் 12, 2026 04:13 AM

விழுப்புரம்: விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் இன்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதால் கூட்டணி கட்சியினர் திரளாக பங்கேற்க தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து அவரது அறிக்கை:
விழுப்புரம் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட விழுப்புரம் நகரம், கோட்டக்குப்பம் நகரம் மற்றும் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு மத்திய அரசை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் இன்று (12ம் தேதி) மாலை 4 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்தவிதமான நிதியும் ஒதுக்காததை கண்டித்தும், நுாறு நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தை முடக்க நினைக்கும் மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள், கிளை செயலாளர்கள், தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

