sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தி.மு.க., பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

/

தி.மு.க., பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

தி.மு.க., பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

தி.மு.க., பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்


ADDED : நவ 04, 2025 01:24 AM

Google News

ADDED : நவ 04, 2025 01:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: மேல்களவாய் கிராமத்தில் வல்லம் ஒன்றியத்தைச் சேர்ந்த தி.மு.க., பூத் முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் நடந்த கூட்டத்திற்கு, ஒன்றிய அவைத் தலைவர்கள் ஏழுமலை, ராமகிருஷ்ணன், வெங்கடேசன் தலைமை தாங்கினர். மயிலம் சட்டசபை தொகுதி தேர்தல் மேற்பார்வையாளர் புகழேந்தி முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, துரை, இளம்வழுதி வரவேற்றனர்.

வடக்கு மாவட்ட செயலா ளர் மஸ்தான் எம்.எல்.ஏ., பேசுகையில், 'முதலமைச்சர் ஸ்டாலின் செய்த சாதனைகளை வீடு, வீடாகச் சென்று சொல்லி ஓட்டு கேட்க வேண்டும், செஞ்சி, மயிலம் திண்டிவனம் தொகுதிகளில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற அனைவரும் கடுமையாக உழைக்கவேண்டும்.

இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் இன்று 4ம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை செயல்படுத்த உள்ளது. தி.மு.க.,வினர் 'என் ஓட்டுச்சாவடி; வெற்றி ஓட்டுச்சாவடி' என்ற முன்னெடுப்புடன் செயல்பட வேண்டும்.பூத் முகவர்கள், டிஜிட்டல் முகவர்கள் விழிப்புடம் இருக்க வேண்டும். பெயர் சேர்த்தல், நீக்குதல் பணியை கவனமுடன் மேற்கொள்ள வேண்டும்' என்றார்.

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, செந்தமிழ்ச்செல்வன், மாவட்ட அவைத்தலைவர் சேகர், தலைமை தீர்மான குழு உறுப்பினர் சிவா, வல்லம் ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us