/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம், திண்டிவனத்தில் கவர்னரை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
விழுப்புரம், திண்டிவனத்தில் கவர்னரை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
விழுப்புரம், திண்டிவனத்தில் கவர்னரை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
விழுப்புரம், திண்டிவனத்தில் கவர்னரை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 08, 2025 05:50 AM

விழுப்புரம்: தமிழக கவர்னரை கண்டித்து விழுப்புரம் மற்றும் திண்டிவனத்தில் தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், மாவட்ட துணை செயலர்கள் முருகன், இளந்திரையன், கற்பகம், நகர சேர்மன் தமிழ்ச்செல்வி, ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி பேசுகையில், தமிழக சட்டசபையின் இந்தாண்டு முதல் கூட்டத்தை மரபுபடி துவக்கவே கவர்னருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், தமிழ்தாய் வாழ்த்தை அவமதித்த கவர்னர், தேசிய கீதம் பாடவில்லை எனக்கூறி ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தில் செயல்படுகின்றார். தொடர்ந்து, தமிழர்களை அவமதிக்கும் கவர்னர் ரவியை விரட்டும் காலம் வெகுதொலைவில் இல்லை என்றார்.
ஒன்றிய செயலர்கள் தெய்வசிகாமணி, முருகவேல், பிரபாகரன், மும்மூர்த்தி, தங்கம், விஸ்வநாதன், நகர செயலர் சக்கரை, ஜீவா, மகளிரணி தேன்மொழி, இளைஞரணி மணிகண்டன், இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திண்டிவனம்
வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் திண்டிவனம் காந்தி சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சேகர் தலைமை தாங்கினார்.
முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சீத்தாபதிசொக்கலிங்கம், சேதுநாதன், தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் சிவா, நகர செயலாளர் கண்ணன், மாவட்ட பொருளாளர் ரமணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், துணை அமைப்பாளர்கள் ரமேஷ், பாபு, மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், நகர்மன்ற தலைவர் நிர்மலாரவிச்சந்திரன், முன்னாள் நகர செயலாளர் கபிலன்,ஒன்றிய செயலாளர்கள் சொக்கலிங்கம், ராஜாராம், பழனி, தயாளன், கவுன்சிலர் நந்தகுமார், செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்கதியார் அலி, சிறுபான்மை அணி அன்சாரி, நகர துணை செயலாளர் கவுதமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.