sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வாய்க்கால் சீரமைப்பு பணி; கலெக்டர் ஆய்வு

/

வாய்க்கால் சீரமைப்பு பணி; கலெக்டர் ஆய்வு

வாய்க்கால் சீரமைப்பு பணி; கலெக்டர் ஆய்வு

வாய்க்கால் சீரமைப்பு பணி; கலெக்டர் ஆய்வு


ADDED : அக் 11, 2024 11:22 PM

Google News

ADDED : அக் 11, 2024 11:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி மழைநீர் வடிகால் மற்றும் கழிவுநீர் கால்வாய் துார்வாரும் பணியை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விழுப்புரம் ரங்கநாதன் தெரு, தாமரைக்குளம் பகுதியில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, கோலியனுாரான் வாய்க்கால்களில் துார்வாரும் பணி நடந்தது. இப்பணியை கலெக்டர் பழனி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறுகையில், 'வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக, அனைத்து துறைகள் மூலம் பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்காதபடி அனைத்து கழிவுநீர் கால்வாய், மழைநீர் வடிகால்கள் மற்றும் கோலியனூரான் வாய்க்கால்களில் துார்வாரி மழைநீர் தங்குதடையின்றி செல்லும் வகையில், தேவையான முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்றார்.

ஆய்வின்போது நீர்வளத்துறை செயற்பொறியாளர் ஷோபனா, நகராட்சி கமிஷனர் வீரமுத்துக்குமார், தாசில்தார் கனிமொழி உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us