sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வீதி மீறிய 105 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து: வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி

/

வீதி மீறிய 105 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து: வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி

வீதி மீறிய 105 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து: வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி

வீதி மீறிய 105 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து: வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி


ADDED : மே 16, 2025 02:33 AM

Google News

ADDED : மே 16, 2025 02:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்:மோட்டார் வாகன விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ரூ.2.27 லட்சம் அபராதமாக வசூலித்தனர். மேலும் 105 பேரின் லைசென்ஸ் ரத்தாகியதோடு, வாகனம் ஓட்டிய சிறுவர்களின் பெற்றோர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றியுள்ள நெடுஞ்சாலைகளில் தினந்தோறும் வாகனங்களின் போக்குவரத்து அதிகரித்து கொண்டு செல்கிறது. வாகன போக்குவரத்து அதிகரிக்கும் எண்ணிக்கைகளுக்கு ஏற்ற வகையில், வாகன போக்குவரத்து விதிமுறை மீறல் செயல்களும் அதிகரித்து கொண்டே செல்கிறது.

போக்குவரத்து விதிமீறல்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் பணிகளில் விழுப்புரம் வட்டார போக்குவரத்து துறை ஈடுபட்டுள்ளது.

வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம் உத்தரவின் பேரில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வாகனங்களை திடீர் ஆய்வுகள் செய்து விதிமீறல்களை கண்டறிவேதாடு, அபராதம் வசூலிக்கின்றனர்.

மேலும், தொடர்ந்து அந்த ஓட்டுநர் விதிமீறலில் ஈடுபட்டால் சைசென்ஸ் பறிமுதல் செய்வதாக எச்சரிப்பதோடு, மீறினால் லைசென்சை பறிமுதல் செய்வதற்கான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விழுப்புரம், விக்கிரவாண்டி, அரசூர், மடப்பட்டு, கோலியனுார் கூட்ரோடு, முண்டியம்பாக்கம் உட்பட பல்வேறு பகுதிகளில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அடிக்கடி வாகனங்களை திடீர் ஆய்வு செய்து வருவது வழக்கமாக உள்ளது.

இதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் போக்குவரத்து அலுவலர்கள் வாகனங்களை ஆய்வு செய்து, விதிமுறை மீறிய வாகனங்களை கண்டறிந்து அபராதத்தை வசூலித்து அரசு கணக்கில் சேர்த்துள்ளனர்.

இதன்படி, போக்குவரத்து விதிகளை மீறியதாக இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் சென்றதாக 23 வழக்குகளும், மொபைல் பேசியபடி வாகனங்களை ஓட்டியதாக 20 வழக்குகளும், கார்களில் சீட் பெல்ட் அணியாதது 7 வழக்குகளும், எப்.சி., இல்லாமல் வாகனங்களை ஓட்டியதாக 15 வழக்குகள், இன்சூரன்ஸ் இல்லாதது 27 வழக்குகள், அதிக பாரம் ஏற்றி சென்றது குறித்து 28 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளை மீறியதற்காக வாகனங்களை ஓட்டிய நபர்களிடம் வரியாக ரூ. 81 ஆயிரத்து 135 வசூலித்ததோடு, அபராதமாக ரூ. 1.46 லட்சம் உட்பட மொத்தம் ரூ.2,27,135 வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை அரசு கணக்கில் சேர்க்கப்பட்டுஉள்ளது.

ஆய்வின் போது விதிமுறை மீறி வாகனங்களை இயக்கியதற்காக 105 வாகன ஓட்டுநர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், போக்குவரத்து விதிமுறை மீறி இருசக்கர வாகனங்களை ஓட்டிய 15 சிறுவர்களின் பெற்றோர்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வரவழைத்து எச்சரித்தனர்.






      Dinamalar
      Follow us