/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போதை ஆசாமி துாக்கு போட்டு தற்கொலை
/
போதை ஆசாமி துாக்கு போட்டு தற்கொலை
ADDED : நவ 07, 2025 12:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்: வானுார் அருகே மதுபோதைக்கு அடிமையானவர், துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வானுார் அடுத்த பூத்துறை, மணவெளி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அரவிந்தன், 26; இவர், குடி போதைக்கு அடிமையாகி சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார்.
உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த அவர் மது போதையில் வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின் பேரில், ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

