sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

முன்விரோதத்தில் முதியவர் அடித்து கொலை: விழுப்புரத்தில் ஒருவர் கைது

/

முன்விரோதத்தில் முதியவர் அடித்து கொலை: விழுப்புரத்தில் ஒருவர் கைது

முன்விரோதத்தில் முதியவர் அடித்து கொலை: விழுப்புரத்தில் ஒருவர் கைது

முன்விரோதத்தில் முதியவர் அடித்து கொலை: விழுப்புரத்தில் ஒருவர் கைது


ADDED : ஜன 17, 2025 11:05 PM

Google News

ADDED : ஜன 17, 2025 11:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்; விழுப்புரம் அருகே முன் விரோத தகராறில் கூலி தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், எதிர் வீட்டைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் அடுத்த அத்தியூர் திருவாதி சின்னத்தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி, 75; விவசாய கூலி தொழிலாளி. இவருக்கும், எதிர் வீட்டை சேர்ந்த கணபதி மகன் அனந்தசேனன்,45; என்பவர் குடும்பத்திற்கும் இடையே, வாகனம் நிறுத்துவது தொடர்பாக முன்விரோத தகராறு இருந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கிருஷ்ணசாமி தனது வீட்டின் முன்பு சைக்கிள் நிறுத்தும் இடத்தில், அனந்தசேனன் தனது ஸ்பிலண்டர் பைக்கை எடுத்து வந்து நிறுத்தியுள்ளார்.

அதனை கிருஷ்ணசாமி தட்டி கேட்டதால், மீண்டும் இரு குடும்பத்தினரிடையே வாய் தகராறு ஏற்பட்டு தாக்கிக்கொண்டுள்ளனர்.

அப்போது ஆத்திரமடைந்த அனந்தசேனன், மது போதையில், அங்கிருந்து இரும்பு கம்பியை எடுத்து தாக்கியதில் கிருஷ்ணசாமி மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

அதனை தடுக்க வந்த அவரது மகன் குமரேசன், 39; மருமகள் அபிநயா, 30; ஆகியோரையும் அனந்தசேனன் தாக்கியதில் பலத்த காயமடைந்தனர். தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் விரைந்து சென்று, கிருஷ்ணசாமி உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தப்பியோடிய அனந்தசேனனை பிடித்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து, விழுப்புரம் தாலுகா போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து நேற்று அனந்தசேனனை கைது செய்து, விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us